சில பேரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். அவர்கள் எந்த விதமான லட்சியங்களும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. இதனால் அவர்களுக்கும் பயன் கிடைப்பதில்லை, அதேவேளையில் அவர்களைச் சுற்றி உள்ள உறவுகளுக்கும் பயன் கிடைப்பதில்லை. ஆனால், அந்த உறவுகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருப்பதில்லை.
வாழும் காலம் கொஞ்சம். அதாவது நமது நாட்டின் சராசரி ஆயுட்காலம் 55 வருடங்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகிறது. அதில் குழந்தைப் பருவத்தில் விபரம் தெரியாமலே சில வருடங்களை இழந்து விடுகிறோம். வாழும் காலத்திலேயே தூக்கத்துக்காக பாதியை ஒதுக்கி விடுகிறோம். அப்படி இருக்கும் போது, விபரம் தெரிந்து வாழும் மணித்துளிகளாவது தனக்கு நன்மை கிடைக்காமல் போனாலும், தன்னை சுற்றியுள்ள உறவுகளுக்கு நன்மை கிடைக்கும் விதத்தில் வாழலாம் அல்லவா.
பிறப்பதற்கு முன்னமே பல உறவுகள் உருவாக்கப்பட்டு விடுகின்றன. பிறக்கும் போது தாய், தந்தை, மாமா, மாமி, சித்தப்பா, பெரியப்பா என பல உறவுகளுடன் தான் பிறக்கிறேம். உறவுகளினால் பின்னிப் பினைக்கப்பட்டு, அதன் ஒரு அங்கமாக இருக்கும் போது, அவர்களின் சந்தேசமும் நமக்கு முக்கியம் அல்லவா..
வாழும் காலத்தில் நாமும் சில உறவுகளை( கணவன்/மனைவி, நன்பன் போன்ற ) உருவாக்கிக் கொள்கிறோம். அந்த உறவுகளை தேர்ந்துடுக்கும் போதும் பல பேர் சரியான முறையில் பயன்படுத்தாமல், அதன்பின் வாழ்க்கையில் சீரழிந்து வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றி விடுகிறார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் என்ன? எந்த விதமான லட்சியமும் இன்றி, எப்படியும் வழலாம் என்ற நோக்கத்தில் வாழ்வதால் தான் என்று கருதுகிறேன். எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும் அலசி ஆராய்ந்து, அந்த செயலில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு, இறுதியில் நம் ஆழ்மனதுக்கு எது சரியாக தோன்றுகிறதோ.. அதையே முடிவாக எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் பிரச்சினைகள் ஓரளவு குறையும் என்பது என் கருத்து. அந்த முடிவு சரியானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.கண்டுபிடிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் ஆறறிவுடைய மனிதன் தானே!.
திறமையானவர்களிடம் ஆலோசனை கேட்பது தவறு கிடையாது. அவர்களின் பல வருட ஞானத்தை நாம் சில மணிநேரங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை எப்றே கருதுகிறேன்.
அதேவேளையில் எந்த தேவைகளின் மீதும் அளவுக்கு அதிகமான ஈடுபாட்டை உருவாக்குவதும் தவறு. அளவுக்கு அதிகமான ஈடுபாடு தான், அந்த தேவைகள் பூர்த்தி ஆகாமல் தோல்வி அடையும் போது ஒருவித மனவேதனையை உருவாக்குகிறது. வாழ்க்கையின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த வெறுப்பு தான் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களை செய்ய தூண்டுகிறது என்று நினைக்கிறேன்.
சிலர் சொல்வார்கள் நன்பானால் என் வாழ்க்கை சீரழிந்தி விட்டது. உறவினர்களால் வாழ்க்கை சீரழிந்தி விட்டது. காதலித்து அவள் ஏமாற்றி விட்டாள் அதனால் தான் குடிகாரணாக மாறிவிட்டேன். என்று.
இவர்கள்து காரணங்களை நான் ஏற்றுக்கொளவதில்லை. நன்பனைத் தேர்ந்தெடுத்தது நீ தானே.. ஏன் அவனை குறை சொல்ல வேண்டும். அவளை காதலித்தது நீ தானே.. அந்த பெண்ணை ஏன் குற்றம் சொல்ல வேண்டும். நீ சரியான முறையில் தேர்ந்தெடுக்கவில்லை அது உன்னுடைய தவறு. நீ தான் நல்லது எது? கெட்டது எது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
சிலர் தாங்கள் செய்யும் தவறுக்கு பல காரணங்கள் முன் வைப்பார்கள். அது அவர்கள் தாங்கள் செய்யும் தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.அதனால், தாங்கள் செய்வது சரி என்று சொல்வதற்காகத்தான்
'அழவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சு" என்பது போல தேவைகைளின்
மீது தேவையான அளவு மட்டுமே ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். அதிகமாக உருவானால் நமக்கு அழிவாக மாறி விடும். ஆனால் உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். எல்லாத்துறைகளைப் பற்றியும் தெரிந்து அனுபவித்து வாழ்க்கை பூர்த்தியடைந்த முழு மனிதனாக இறுதிய்ல் முடித்துக்கொள்ள வேண்டும். நாம் இல்லதா நேரத்திலும் உலகத்தில் சிறுது காலமாவது நம் பெயர் சொல்லும் விதத்தில் எதையாவது நல்ல செயல்களை செய்து விட்டு மறைய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அருமையான கருத்துக்கள்
kindly remove word verification
சிறப்பான பதிவு கருத்துகள் !
தாமரை இலை தண்ணீர் போல வாழ்க்கையுடன் ஒட்டுதல் இருக்க வேண்டும்.அதிக ஈடுபாடோ,அதிக அலட்சியமோ நஷ்டத்தில் முடியும்.(மருத்துவருக்கு கொடுக்க வேண்டி வரும்)
nice, welcome and contratulations!
'அழவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சு"
ழ - Mistake.
ள - Correct.
நன்பானால்
ன் - Mistake
ண் - Correct
The whole word - Mistake
Post a Comment